
இன்று முதல், மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த அலுவலகங்கள் ஊடாக ஒரு நாள் சேவைக்காக முன்னதாகவே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிய 100 விண்ணப்பதாரர்களுக்கு இந்த சேவை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.