
உலகிலேயே அழுக்கான மனிதராக அறியப்படும் அமோவ் ஹாஜி ஈரான் நாட்டை சேர்ந்தவர். இவர் 67 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கிறாராம். தெற்கு ஈரான் பகுதியில் உள்ள தெஜ்ஹாக் என்ற கிராமத்தை சேர்ந்த அமோவ்க்கு தண்ணீர் என்றாலே பயம். இதனால் கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக தண்ணீரில் தன் உடலை நனைத்ததே இல்லயாம்.குளித்தால் தான் நோய்வாய் பட்டுவிடுவோம் என நம்புகிறார். இதனால் தண்ணீர்பக்கம் எட்டிப்பார்பதில்லை. உடல் முழுவதும் புழுதி படிந்து எப்போதும் அழுக்காகவே இருப்பார் அமோவ்.
தன் இளமை காலத்தில் ஏற்பட்ட சில கவலைக்குரிய சம்பவங்களால் தனிமையிலேயே அமோவ் வசித்து வருகிறார். அமோவின் உணவுப்பழக்கமும் வித்தியாசமானதுதான். இறந்த விலங்குகளின் அழுகிய உடற்பாகங்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். முள்ளம்பன்றி கறிதான் இவருக்கு பிடித்த உணவு. 87 வயதாகும் அமோவ்க்கு புகைக்கும் பழக்கமும் உண்டு. உடல் எவ்வளவுக்கு எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நோய் வராது என்பது அவரின் நம்பிக்கை.
-
தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்- ‘வலிமை’ வேற லெவல் எடிட் வீடியோ!
-
அவுஸ்திரேலிய அரசோடு மோதும் கூகுள் நிறுவனம்!
0